×
 

மெத்தனம் கூடாது முதல்வரே..! சிறுமி கொலை சம்பவத்தில் கனிமொழி வேதனை..!

சிறுமி கொலை சம்பவத்தில் மெத்தனம் காட்டக்கூடாது என கனிமொழி வலியுறுத்தினார்.

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் நிலை கதிகலங்க வைக்கிறது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சம்பத்குமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவத்திற்கு தமிழக முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணத்தை அலசும் திமுக! காத்திருக்கும் அதிரடி! மு.க.ஸ்டாலின் எடுத்த முடிவு!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இதையும் படிங்க: “தகவல் யுகம் அல்ல... தவறான தகவல் யுகம்...” - இன்ஸ்டாகிராமில் தீயாய் பரவும் பொய் செய்தியால் டென்ஷன் ஆன கனிமொழி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share