"மன்மத நன்றி"..! இதுக்கு END- ஏ இல்லையா.? கள்ளக்குறிச்சி MLA பேச்சால் அரண்டுப்போன கனிமொழி..!
கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பேச்சின் தடுமாற்றத்தால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நடைபெற்ற அமர்வில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.எல்.ஏ.வின் பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தனது முதல் உரையை ஆற்றும்போது நடந்த இந்த சம்பவம்தான் அந்த விவாதத்திற்குக் காரணம்.பேரவையில் பேசும் வாய்ப்பு கிடைத்ததை முன்னிட்டு கனிமொழி தனது உரையைத் தொடங்கினார்.
முதல்வர் விஜய்யைப் புகழ்ந்து, அவரது திரைப்படப் பெயர்களைக் கொண்டே கோர்வையாகப் பேசினார். பீஸ்ட், அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன் என அவரது திரைப் பெயர்களை இணைத்து, பெண்களின் பாதுகாப்பு குறித்தும், மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். உரையின் இறுதியில் சபாநாயகருக்கும், தொகுதி மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் தருணம் வந்தது.
அப்போது அவர் “மனமார்ந்த நன்றி” என்று சொல்ல வேண்டிய இடத்தில் வாய் தவறி “மன்மத நன்றி” என்று உச்சரித்துவிட்டார். சிலர் அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டனர். பின்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது அதே தவறை வேண்டுமென்றே நினைவுபடுத்தினார். “தமிழில் வணக்கம் என்றாலே டிரோல் பண்ணிடுறாங்க. அதனால் டிரோலில் வந்ததையே சொல்லிவிடலாம்” என்று சிரித்தபடி “எல்லாருக்கும் மன்மத வணக்கம்” என்று தொடங்கினார். அந்தப் பேச்சும் மீண்டும் வைரலானது. தனது தவறை ஏற்று, அதை நகைச்சுவையாக மாற்றிய அந்த அணுகுமுறை பலருக்குப் பிடித்திருந்தது.
இதையும் படிங்க: பெரியார் சிலை விவகாரம்! கனிமொழி குறித்த சர்ச்சை பதிவு! எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் முக்கிய தீர்ப்பு!
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தவெக எம் எல் ஏ இன்று சட்டசபையில் பேசும்பொழுது மனமார்ந்த நன்றி என்னுமிடத்தில் தடுமாறினார். மன்மத நன்றி இன்று உச்சரிப்பது போல் அமைந்துவிட்டது. இதனைக் கேட்டதும் அவருக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி அரண்டு போனார். உடனே அருகில் இருந்த தவெக எம்எல்ஏக்களுள் சற்று சிரிப்பலை ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திமுகவில் பரபரப்பு.. கனிமொழி - உதயநிதி தரப்புகளுக்கு இடையே மோதல்? உட்கட்சி அதிகாரப் போட்டி உச்சம்!