×
 

விடிந்ததுமே கர்நாடகாவுக்கு காத்திருந்த ஷாக்... ஆடிப்பெருக்கில் தமிழகத்திற்கு ஓடோடி வரும் காவேரி...!

காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. தற்போதைய நிலையில் தங்களின் குடிநீர் தேவைக்காக 40 டி.எம்.சி. தண்ணீரை இருப்பு வைப்பது அவசியம். தண்ணீர் கோரி தமிழகத்திடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ள போதும் கர்நாடக மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனே முக்கியம் என கர்நாடகா அரசு முடிவெடுத்திருந்தது. 

ஆனால் மனிதர்களை விட வலிமையானது என்பதை இயற்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. கர்நாடகால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினியில் அதிக நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது. கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலைக்​கா​விரி, பாகமண்டலா, மடிகேரி உள்​ளிட்ட பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை கடந்த 2 மாதமாக வழக்கமான அளவு பெய்​ய​வில்​லை. இதனால் காவிரி ஆற்​றின் குறுக்கே உள்ள கிருஷ்ண​ராஜ​ சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய 4 அணை​களுக்கும் நீர்வரத்து இன்றி நீர்மட்டம் குறைவாக இருந்தது.

இதனால், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி ஜூன், ஜூலை மாதங்​களில் தமிழகத்​துக்கு திறக்க வேண்​டிய நீரை கர்​நாடக அரசு திறக்​க​வில்​லை. தமிழக அரசு ஜூலை 28 ஆம் தேதி காவிரி ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டத்​தில் முறை​யிட்​டதை அடுத்​து, 15 நாட்​களுக்கு தமிழகத்​துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​விட வேண்​டும் என ஒழுங்​காற்​றுக் குழு உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணை​யத்​தில் கர்​நாடக அரசு மேல்முறையீடு செய்​தது.

கர்​நாட​கா​வின் கோரிக்​கையை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணை​யம், தமிழகத்​துக்கு 15 நாட்​களுக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​விடு​மாறு உத்​தர​விட்​டது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தது. காவிரி பங்​கீட்டு விவ​காரத்​தில் தமிழகம் - கர்​நாடகா இடையே மோதல் முற்​றி வந்தது.


இந்நிலையில், ஜூலை 31 ஆம் தேதி முதல் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்து வருகிறது. காவிரி உற்​பத்​தி​யாகும் தலைக்​கா​விரி​, வயநாட்டில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை கொட்டியதால் ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக 2,000 கனஅடி உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு 27,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள இந்த காவிரி நீர், இன்று மாலைக்குள் தமிழக எல்லையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 32,000 கனஅடி வீதம் நீர்வரத்து இருந்து வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கபினி அணையிலிருந்தும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

இதனால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிங்க: காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share