×
 

BE ALERT.. மீண்டும் அச்சுறுத்த தயாராகும் கொரோனா.. கர்நாடகாவில் சித்தராமையா ஸ்மார்ட் மூவ்..

மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 2 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் இன்று ஒரு நாளில் மட்டும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 104 பேர் கொரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து தற்போது 1009 ஆக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 752 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, மகாராஷ்டிரா, டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாட்டில் தற்போது கேரளாவில்தான் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 430 பேர் கேரளாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டாம் இடமாக, மகாராஷ்டிராவில் 209 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்று மட்டும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த பட்டியலில் டெல்லி மூன்றாமிடத்தில் உள்ளது. 

இதையும் படிங்க: கேரளாவில் தலைதூக்கும் கொரோனா பரவல்.. சுகாதார அமைச்சர் சொல்வது என்ன..?

தொடர்ந்து, குஜராத்தில் 83 பேர், தமிழ்நாட்டில் 69 பேர், கர்நாடகாவில் 47 பேர், உத்தர பிரதேசத்தில் 15 பேர், ராஜஸ்தானில் 13 பேர், மேற்கு வங்கத்தில் 12 பேர் என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாகவே அதிகரித்து வருகிறது. சமீபத்தில், மகாராஷ்டிராவில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் 2 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்தனர். இதுவரை அந்தமான் நிக்கோபார், அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தொற்று ஏதும் பதிவாகவில்லை.

இந்த நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து முதலமைச்சர் சித்தராமையா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணா இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.  இதில் சித்தராமையா பேசியதாவது:- "கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போதைக்கு பயப்பட தேவை இல்லை.

ஆனால் வரும் நாட்களில் நிகழும் நிகழ்வுகளை ஆராய்ந்து அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும். செயற்கை சுவாச கருவிகள், மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், சுவாச பிரச்சினை உள்ளவர்கள் முககவசம் அணிவது நல்லது. இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாரந்தோறும் அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை ஆலோசனை நடத்தி நிலையை கண்காணிக்க வேண்டும். அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் தேவையான வசதிகளை செய்துகொள்ள வேண்டும். 

சளி, காய்ச்சல் உள்ள குழந்தைகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுடன் பேசி, இத்தகைய நோய் அறிகுறி உள்ள குழந்தைகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். எத்தகைய நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்தில் கொரோனா உதவி மையத்தை திறக்க வேண்டும். வரும் நாட்களில் விமான நிலையங்களில் தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் அலட்சிய மனப்பான்மை வேண்டாம். அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் விடுமுறையில் வெளியூர் செல்ல அனுமதி அளிக்கக்கூடாது.

 மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசிகளை போதுமான அளவுக்கு தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் பல நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! டூர் செல்வது பாதுகாப்பானதா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share