×
 

நாட்டையே உலுக்கிய கரூர் கோரச் சம்பவம்… நிவாரணத் தொகை வழங்கிய திருமா…!

கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிவாரண தொகையை வழங்கினார்.

தமிழக அரசியல் அரங்கில் புதிதாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் பரப்புரை பயணம், எதிர்பாராத துயரத்தைத் தந்தது. 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி, கரூர் நகரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல், ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது.

குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த இந்த அவலத்தில், மூன்று நிலைகளில் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் த.வெ.க சார்பில் நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன. முதலில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க அறிவிக்கப்பட்டது.

காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கியது. 

இதையும் படிங்க: அண்ணாமலை ஏன் வரிந்து கட்டிக்கிட்டு வக்காலத்து வாங்குறீங்க? - வழக்கறிஞர் விவகாரத்தால் டென்ஷன் ஆன திருமா...!

த.வெ.க தலைவர் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். இவை தவிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹50,000 நிவாரணத் தொகையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வழங்கினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இதையும் படிங்க: அவர் கூப்பிட்டப்ப வர முடியல! ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் உருக்கம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share