#BREAKING: என்ன சொல்லித் தேற்றுவது… உடைந்துப் போன உதயநிதி… கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி…!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: "THANK YOU" சின்ன வார்த்தை சார்... உதயநிதியை புகழ்ந்து பேசிய செஸ் வீராங்கனை வைஷாலி...!
கரூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசியல் பற்றிய தலைவர்கள் படையெடுத்துள்ளனர். இரவோடு இரவாக முதலமைச்ச ஸ்டாலின் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்கள் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துபாயிலிருந்து தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு கரூருக்கு சென்றடைந்தார்.
அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தவுடன் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கவலை தோய்ந்த முகத்துடன் வந்திருந்த துணை முதல்வர் உதயநிதி, கதறும் உறவினர்களுக்கு என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் நின்றார்.
இதையும் படிங்க: "வெற்றிடம்"... மறைந்த பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி...!