×
 

செந்தில் பாலாஜிக்கு அடுத்த அடி... கரூரை சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை... திமுக ஒன்றிய செயலாளர் வீட்டிலும் ரெய்டு...!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உள்ளிட்ட மொத்தம் ஆறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் தற்போது மொத்தம் ஆறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்குமாறு சிலர் தொலைபேசி மூலம் பணம் கொடுப்பதாகக் கூறி பேரம் பேசியதாக, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், பல தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சக்தி கார்த்தி மற்றும் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே கரூரில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை ... செந்தில் பாலாஜி நண்பர்களுக்கு செக்...!

பின்னர், இருவருக்கும் நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாலை முதல் நடைபெற்று வரும் இந்த சோதனையில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் ஆவணங்கள் மற்றும் முக்கிய பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவரது பூர்வீக வீட்டில் இன்று காலை 7 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அங்கு அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல், செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளராக இருந்த சுப்பிரமணியனின் மூர்த்தி வளையம் பகுதியில் உள்ள வீட்டிலும், கோயம்பள்ளியில் உள்ள திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஸ்கரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும், கோதை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், தொழில்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணி முதல் தொடங்கிய இந்த சோதனை, கரூரில் மொத்தம் ஆறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனை, கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: மிரட்டல் நடந்ததா..? குதிரை பேர வழக்கு... தீவிர விசாரணை..! செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share