#BREAKING தமிழகத்தையே உலுக்கிய கரூர் வழக்கு - கொடூரர்களுக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!
கரூர் விவசாயி கொலை வழக்கு: மூவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயி கொலை வழக்கில் தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா, குப்பம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெகன்னாதன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஜெகன்னாதனுக்கும், அவரது தோட்டத்திற்கு அருகில் செயல்பட்டு வந்த குவாரி உரிமையாளருக்கும் இடையே நீண்டநாள் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி ஜெகன்னாதன் வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: “ஒழுங்கா ஆட்சி நடத்துற வழியைப் பாருங்க...” - திரும்ப, திரும்ப திமுகவை சாடும் விஜய்க்கு கனிமொழி சுளீர் பதிலடி...!
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுநர் சக்திவேல் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் என கண்டறியப்பட்டனர். இதையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும், சாட்சிகளும் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி, விவசாயி ஜெகன்னாதன் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்வகுமார், சக்திவேல் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!