×
 

ரூ.25,000 கோடி மதிப்புள்ள கரூர் கோயில் நில வழக்கு... உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

கரூர் கோவில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த ஆணைக்கு தடை விதிக்க கோரி மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நாளை விசாரணை நடத்தவுள்ளது. 

கரூர் கோயில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி இன்று முறையீடு முன்வைக்கப்பட்டது. சுமார் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும், இந்த ஆணை மீது தடை விதிக்க அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் முறையீட்டில் முன்வைக்கப்பட்டது. 

சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த முறையீட்டை முன்வைத்துள்ளார். கரூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற  பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,  கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில்,  ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள்  15 கிராமங்களில் உள்ளன. 3,390 ஏக்கர் நிலத்திற்கு தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிலங்கள் இந்து சமய  அறநிலையத்துறையால் பத்திரப் பதிவிற்கு தடை செய்யப்பட்டவை எனவும், அதில் 3,084.95 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார். 

உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கார்த்திகேயன் சக்தி வேலு அமர்வு முன்பு, இதற்கு தடை விதிக்க வேண்டும் கோவில் நிலங்கள் இன்று பட்டாக்கள் செய்வதற்காக முகாந்திரம் உள்ளது எனவே இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தார்.  இதற்கு நீதிபதிகள் வழக்கை முறையாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோயில் சொத்து தாரைவார்ப்பு?!! அறநிலையத்துறை உத்தரவால் சலசலப்பு!

இதையும் படிங்க: சினிமா கிளைமேக்ஸ் போல கத்தி பேசுறாரு..! முதல்வர் விஜய்யை விமர்சித்த டிடிவி தினகரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share