×
 

நாட்டுப்புறப் பாடலால் அனைவரது பேரன்பை பெற்றவர்... கொல்லங்குடி கருப்பாயி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!

பிரபல நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியை சேர்ந்த கருப்பாயி என்பவர் நாட்டுபுற பாடகர். இவர் ஆண்பாவம் திரைப்படம் மூலம் திரையில் அறிமுகமாகி ஆயுசு நூறு, ஏட்டிக்கு போட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவருக்கு 1993 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தார். 

இந்த நிலையில் தனது 99 ஆவது வயதில் கொல்லங்குடி கருப்பாயி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.  பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி அவர்கள் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக கூறி உள்ளார்.

இதையும் படிங்க: அசால்ட் அக்யூஸ்ட்.. கேட்கப் போனா அரெஸ்ட்! இவங்கள நம்புனா அவ்வளவுதான்.. ஆவேசமான இபிஎஸ்!

நடிகை கொல்லங்குடி கருப்பாயி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் போலி விவசாயியா? சொல்லுற தகுதி உங்களுக்கு இல்ல ஸ்டாலின்..! இபிஎஸ் தாக்கு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share