×
 

இடைத்தரகர் வீட்டில் 8 மணி நேரம் சோதனை ... சிக்கிய முக்கிய ஆவணங்கள்... 7 கிலோ தங்கமும், ரூ.27 லட்சமும் பறிமுதல்...!

இதனையடுத்து பிரதாப் ஓசூருக்கு சென்று பொறியாளர்  புருஷோத்தமனை சந்தித்துள்ளார். அப்போது அவர் லஞ்சப் பணத்தை புரோக்கர் சிவகுமாரிடம் கொடுத்து விடுமாறு தெரிவித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள  மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக புருஷோத்தமன் (வயது 48 ) பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ப்ளூ மெட்டல் நிறுவனம் நடத்தி வரும்  சேலம் மாவட்ட மேட்டூரை சேர்ந்த பிரதாப் என்பவர் தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக,  தனது கல்குவாரிக்கு  அனுமதி சான்றிதழ் கேட்டு மனு செய்திருந்தார் .

அப்போது பொறியாளர்  புருஷோத்தமன் , புரோக்கர் சேலம் சிவக்குமார் மூலமாக  ரூபாய் 15 லட்சம் , லஞ்சம் கேட்டுள்ளார். அப்போது தன்னால் 15 லட்சம் தர முடியாது எனக் கூறியுள்ளார். பின்னர் பத்து லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளனர். சரி என்று கூறிய பிரதாப் ,  முதல் தவணையாக ரூபாய் மூன்று லட்சம் தருவதாக  தெரிவித்துள்ளார். இதனை அடுத்து லஞ்சம் தர விரும்பாத பிரதாப் ,  இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஜெயக்குமாரிடம் புகார் செய்தார்.  

இதனையடுத்து நேற்று முன்தினம்  மாலை கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ,  ரசாயன பவுடர் தாடவிய  ரூபாய் 3 லட்சத்தை பிரதாப்பிடம் வழங்கி ,  மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமனிடம் தருமாறு கூறிய அனுப்பி வைத்துள்ளனர் . இதனையடுத்து பிரதாப் ஓசூருக்கு சென்று பொறியாளர்  புருஷோத்தமனை சந்தித்துள்ளார்.  அப்போது அவர் லஞ்சப் பணத்தை புரோக்கர் சிவகுமாரிடம் கொடுத்து விடுமாறு தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே கே.என்.நேருவுக்கு இறங்கிய பேரிடி... ஒரே நேரத்தில் 10 இடங்களில் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை...!

இதனை எடுத்து சேலம் சிவகுமாரை பிரதாப் தொடர்பு கொண்டு ,  லஞ்சப் பணம் 3 லட்சம் தருவது குறித்து கேட்டுள்ளார். அப்போது தான் வெளியூரில் இருப்பதாகவும் தனது வேலை ஆள் , முருக கிருஷ்ணனிடம் சேலத்தில் கொடுத்து விடுமாறும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சேலம் ஐந்து ரோடு பகுதியில் இருந்த முருகனிடம் பிரதாப் லஞ்சப் பணம் 3 லட்சத்தை கொடுக்கும் போது ,  அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக அவரை கையும் களவுமாக பிடித்தனர்.  இதனைத் தொடர்ந்து , ஓசூர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் புருஷோத்தமனையும் , புரோக்கர் சிவகுமார் மற்றும. முருகன் என மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்கள் மூன்று பேரையும்  விசாரணைக்கு பின்னர் , நேற்று இரவு சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் .

இந்த நிலையில் கைதான பொறியாளர் புருஷோத்தமனின் ஊர் கடலூர் ஆகும் இவருக்கு சென்னையில் வீடு இருக்கிறது நேற்று இரவு அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.  அதேபோல்  புரோக்கர்  சிவகுமாரின்  வீடு ,  சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில் உள்ளது. நேற்று நள்ளிரவு  அங்கு சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார்,  சுமார் 2500 சதுர அடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புரோக்கர் சிவக்குமாரின் பங்களா வீட்டை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவரது வீட்டில் நள்ளிரவில் தொடங்கி அதிகாலை வரை சுமார் ஐந்து மணி நேரம் சோதனை மேற்கொண்டதில்,  வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூபாய் 27 லட்சம் மற்றும் 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட புரோக்கர் சிவகுமாரின் பாஸ்போர்ட்டையும்  பறிமுதல் செய்தனர். ஆஸ்திரேலியாவிலும் அவர்  வியாபாரம் செய்து வருவதாக புகார் கூறப்பட்டதால்,  அது குறித்தும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் புரோக்கர் சிவக்குமாருக்கு இவ்வளவு சொத்து வர காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: #BREAKING செயற்கை கருத்தரிப்பு மையங்களில் அதிரடி... சென்னை, மதுரையில் 2வது நாளாக களமிறங்கிய வருமான வரித்துறை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share