×
 

கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

கேரளாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அமைப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் பதவிக்காலம் மே 23-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. 140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டசபையில் 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், யுடிஎஃப் ஏற்கெனவே 91 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தனியாகவே 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலை விட இந்த முறை 51 தொகுதிகள் அதிகமாக யுடிஎஃப் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. மறுபுறம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான எல்டிஎஃப் 34 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 58 தொகுதிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ(எம்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும், பிற சிறு கட்சிகள் 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த இடைக்கால முடிவுகள், இடதுசாரி முன்னணியின் தோல்வியை உறுதி செய்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் கேரளா எதிர்கொண்ட பெரும் இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இடையே நடைபெற்ற இந்தத் தேர்தலில், மக்கள் மாற்றத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த முறை தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், எந்த விதமான வன்முறையும் இன்றி அமைதியாக நடைபெற்றது. மொத்தம் 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே யுடிஎஃப்-ன் வெற்றி தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சி 91க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மைக்கு மேல் பலத்துடன் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது. இந்த முடிவு கேரள அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. புதிய அரசு அமைக்கும் பொறுப்பை காங்கிரஸ் ஏற்க உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! தோல்வியை ஒப்புக்கொண்டாரா பினராயி விஜயன்..?? அதிர்ச்சி செயல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share