×
 

கொலை முயற்சி? மதுரை ஆதினம் அளித்த புகார்.. சிசிடிவி காட்சியை வெளியிட்ட போலீஸ்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நடந்த விபத்தை அடுத்து, தன்னை திட்டமிட்டு கொல்ல சதி நடப்பதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் மதுரை ஆதீனம் குற்றம் சாட்டிய நிலையில், சிசிடிவி காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில் சென்னை அருகே காட்டாங்குளத்துாரில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடந்து வருகிறது. மே 5 வரை நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் காலை மதுரை ஆதினம் காரில் புறப்பட்டு சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில் அஜீஸ் நகர் சர்வீஸ் சாலை வழியாக ரவுண்டானாவை கார் கடந்து செல்ல முயன்றபோது பின்னால் வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் துாங்கிக்கொண்டிருந்த ஆதினம் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார். தன்னை கொல்ல நடந்த சதியாக இருக்கலாம் என ஆதினம் சந்தேகம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதில், வமதுரை ஆதீனம் மடாதிபதி மதுரையிலிருந்து சென்னையில் நடைபெறும் சைவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே 2-ம் தேதி உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை சென்றார். அப்போது உளுந்தூர்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் உள்ள நிலையில் சென்னை செல்வதற்கு மேம்பாலத்தின் வழியாக மதுரை ஆதீனம் சென்ற கார் செல்லாமல் கீழே பிரிவு சாலை வழியாக உளுந்தூர்பேட்டை நோக்கி செல்லக்கூடிய சாலையில் மதுரை ஆதீனம் சென்ற FORTUNER கார் அதிவேகமாக சாலையை கடக்க முயன்று உள்ளது. 

இதையும் படிங்க: பாக். கட்டாயம் அனுபவிக்கும்.. தூங்குகிற புலியை இடரினால் இதுதான் கதி.. மதுரை ஆதினம் ஆவேசம்..!

அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மாருதி சுசுகி கார் ஒன்று உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா முன்பு வைக்கப்பட்டிருந்த பேரிகாடை கடந்து மெதுவாக முன்னேறி வந்தது. அந்த கார் மதுரை ஆதினம் சென்ற வாகனத்தின் பக்கவாட்டில் உரசியதில் மாருதி சுசுகி வாகனத்தின் முன்பகுதியும் FORTUNER காரின் இடது பக்கத்திலும் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு கார்களில் வந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அவர்கள் சுமார் 10 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த நிலையில் விபத்துக்குள்ளான அதே காரில் மதுரை ஆதீனம் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார். 

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற சைவ மாநாட்டில் கலந்து கொண்ட மதுரை ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும் இதன் பிண்ணனியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த  நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில் தற்போது சிசிடிவி காட்சிகளை வெளியீடப் பட்டு உள்ளது. 

உளுந்தூர்பேட்டையில் மதுரை ஆதீனத்தின் கார் விபத்தில் சிக்கியது சாதாரண விபத்து மட்டுமே என்றும், மதுரை ஆதீனத்தை கொள்வதற்கான எந்த சதியும் நடைபெறவில்லை என்றும் போலீசார் விளக்கம் அளித்து உள்ளனர். சாலையை மதுரை ஆதீனம் சென்ற கார் அதிவேகமாக கடக்க முயன்ற போது அந்த வழியாக மெதுவாக வந்த மாருதி சுசுகி வாகனத்தின் மீது லேசாக மோதி இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. 

இதில் இரண்டு வாகனத்தில் வந்த யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படாத நிலையில் இது தொடர்பாக உழுந்தூர்பேட்டை காவல் நிலையத்திலும் எந்தவிதமான புகார்களும் தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிரும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புரோக்கர் எனக்கூறி வீடுபுகுந்த பெண்.. மயக்கமருந்து கொடுத்து அரங்கேற்றிய கொடூரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share