×
 

பெண்களே ரெடியா...!! விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது? - அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...! 

தமிழகத்தில் ஜூலை 15 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு அறிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புதிய மின் பகிர்மான கோட்ட அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வளங்கள் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தலைமை தாங்கி புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி பேசியபோது, வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் புதிய மின் இணைப்பு பெறுவதற்கு திண்டுக்கல் அலுவலகத்திற்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டும், விவசாயிகள் எளிமையாக மின் இணைப்பு பெறுவதற்காகவும் வேடசந்தூரில் புதிய மின் பகிர்மான கோட்டை அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது” - பாமகவை பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய திருமா...!

வேடசந்தூர் பகுதியில் மட்டும் 47 புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 7 கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பகுதி நேர ரேஷன் கடைகளை முழுநேர கடையாக மாற்றி தர கோரிக்கை எழுந்தால் உடனடியாக முழு நேர கடைகளாக மாற்றி தரப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் தி.மு.க ஆட்சியில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதி வாய்ந்த அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: உதயநிதி காலில் விழுந்த சேகர் பாபு... இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முகம் சுளிக்கும் மக்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share