சாதி கலவரத்தை தூண்டும் மல்லை சத்யா! மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபியிடம் புகார் மனு..!
மல்லை சத்யா மீது மதிமுக வழக்கறிஞர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. துரை வைகோ, முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மல்லை சத்யாவை மறைமுகமாக குறிப்பிட்டு, கட்சிக்கும் தலைமைக்கும் பழி சுமத்தும் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை என்று கூறினார். இதனைத்தொடர்ந்து இருவரிடமும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. வைகோவின் குற்றசசாட்டு தொடர்பாக பேசிய மல்லை சத்யா, துரோகி பட்டம் கொடுத்து கட்சியில் இருந்து தன்னை வைகோ வெளியேற்ற பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கட்டுகிறார் என கூறி இருந்தார்.
இந்த நிலையில், துரை வைகோ அரசியலில் எல்.கே.ஜி. தான் என மல்லை சத்யா கூறி இருந்தார். துரை வைகோவின் வருகைக்கு பிறகு, அவர் சொல்லும் நபர்கள் மட்டுமே வைகோவைச் சந்திக்க முடியும் என்றும் அவர் அனுமதித்தால் மட்டுமே, வைகோவுடன் போனில் பேச முடியும் எனவும் கூறினார். ஜூலியஸ் சீசர்-புரூட்டஸ், ஏசு கிறிஸ்து-யூதாஸ், வீர பாண்டிய கட்ட பொம்மன்-எட்டப்பன் என பல உதாரணங்களைச் சொல்லி என்னை துரோகியாக சித்தரிக்க துரை வைகோ முயன்றதாக கூறி இருந்தார்.
இதையும் படிங்க: மல்லை சத்யா ஒரு துரோகி! வைகோ பேச்சால் ஆவேசமடைந்த மதிமுக நிர்வாகிகள்..!
இந்த மோதல் தொடர்ந்து வந்த நிலையில், மல்லை சத்யா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. வைகோ மற்றும் திருச்சி எம்பி துரை வைகோ ஆகியோரை அவமதிக்கும் வகையில் மல்லை சத்யா பேசி வருவதாக மதிமுக வழக்கறிஞர்கள் புகார் கொடுத்துள்ளனர். விஷம கருத்துக்களை பரப்பி சாதி கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவிப்பதாக மல்லை சத்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துரை வைகோ அரசியலில் LKG பாப்பா..! மல்லை சத்யா கடும் தாக்கு..!