விண்வெளி துறையும் விளம்பரத்துக்கா..? விஞ்ஞானிகளுக்கு செய்ய மறுப்பது ஏன்.? மாணிக்கம் தாகூர் கேள்வி..!
பிரதமர் மோடி எழுதிய அஞ்சல் அட்டை விண்வெளிக்கு செல்ல இருப்பதாக வெளியாகிய தகவல் குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.
பிரதமர் மோடியின் கையால் எழுதப்பட்ட அஞ்சலட்டை விண்வெளிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்திருக்கிறார். விஞ்ஞானிகளுக்கு தேவையானவற்றை மத்திய அரசு ஏன் செய்ய மறுக்கிறது என்ற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார். பிரதமர் மோடியின் கையால் எழுதப்பட்ட அஞ்சல் அட்டை விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள செய்தி, தற்போது ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
விளம்பரத்திற்கு மட்டும் இஸ்ரோவையும், விண்வெளித் துறையையும் பயன்படுத்தும் மோடி அரசு, நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விஞ்ஞானிகளின், ஊதியத்தையும் பணிச்சூழலையும் மேம்படுத்த மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் ராஜினாமா மத்திய அரசின் அலட்சியப் போக்கிற்குச் சான்று என கூறினார். நாட்டின் அறிவார்ந்த சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறியது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறினார். இது மட்டுமல்லாமல் அவர்களின் உழைப்பைச் சரியாக மதிக்காதது வெட்கக்கேடு என்றார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் - ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு... அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
விஞ்ஞானிகளைத் தடுத்து நிறுத்த உத்தரவுகளைப் போடுவதை விடுத்து, அவர்களுக்கு உரிய ஊதியத்தையும் சுதந்திரத்தையும் கொடுங்கள் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி இருக்கிறார். திறமையானவர்களைத் தக்கவைக்கத் தெரியாமல் நாட்டைப் படுகுழியில் தள்ளாதீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். விளம்பரத்திற்கு மட்டும் இஸ்ரோவைப் பயன்படுத்தும் மோடி அரசு, விஞ்ஞானிகளின் ஊதியத்தையும் பணிச்சூழலையும் மேம்படுத்த ஏன் மறுக்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நிர்வாகக் கோளாறுகளால் இஸ்ரோவை சீரழிக்காதீர்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவா..? எம்பிக்களுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!