×
 

உங்கள் தவறை மறைக்க காங்கிரஸ் பலிகடாவா.? திமுகவை பந்தாடிய மாணிக்கம் தாகூர்..!

உங்கள் அரசியல் தவறுகளை மறைக்க காங்கிரஸ் மீது பழி சுமத்துவதா? என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.

தனது கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை சுயபரிசோதனை செய்யாமல், காங்கிரஸை தாக்குமாறு கட்சியின் செய்தி தொடர்பாளர்களுக்கு் முன்னாள் முதலமைச்சர் அறிவுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தனது மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் அரசியல் தவறுகளை மறைக்க, காங்கிரஸ் ஒரு வசதியான பலிகடாவாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஊழல், வசூல் மற்றும் ஆணவத்தின் அடையாளமாக மாறிய ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்தனர் என்றும் அதன் விளைவு அனைவருக்கும் தெரியும். 59 இடங்களுக்கு சுருங்கியதுடன், முதலமைச்சர் தாமும் தோல்வியடைந்தார் எனவும் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார். 

15 அமைச்சர்கள் மக்களால் நிராகரிக்க பட்டனர் என்றும் கூறியுள்ளார். ஆனால் குற்றச்சாட்டு மட்டும் காங்கிரஸ் மீது என்றும் ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். ஏனெனில், TVK தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக நின்றது என்று கூறியுள்ள அவர், பாஜக ஆதரவுடன் பழனிசாமி தலைமையிலான ஆட்சியை அமைக்கும் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கவர்னரு நல்லவர்தான்!! ஆனா.. ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!

மக்களின் தீர்ப்பிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் அரசியல் சில காலம் உதவலாம் என்றும் ஆனால் உண்மையை மறைக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக மகனை காக்க இந்த திசைதிருப்பும் அரசியல் ஏன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்விகளை முன் வைத்திருக்கிறார். 

இதையும் படிங்க: முதல்வரின் பெருந்தன்மை..! வேட்பு மனுத் தாக்கல் செய்த பிரவீன் சக்கரவர்த்தி நெகிழ்ச்சி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share