இனி குண்டாஸ் தான்... மருத்துவ கழிவுகள் சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!
தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாகக் கொட்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையிலான சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
மருத்துவக் கழிவுகளை பொது இடங்களிலோ, நீர்நிலைகளிலோ, எல்லையோர மாவட்டங்களிலோ சட்டவிரோதமாகக் கொட்டுவது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதால், இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு முன்மொழிந்தது.
இந்தத் திருத்தத்தின்படி, மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளாமல் கொட்டுவோர் மீது விசாரணையின்றி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம். இது அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் கழிவுகளைக் கொட்டுவோர்க்கும் பொருந்தும்.
இதையும் படிங்க: தாறுமாறாக உயரப்போகும் பெட்ரோல், டீசல் ரேட்! இஸ்ரேல் - ஈரான் சண்டையால் டாப் கியரில் கச்சா எண்ணெய்..!
சென்னை உயர் நீதிமன்றமும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தவும், இதற்கு ஏற்ப சட்டத் திருத்தம் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தன.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாகக் கொட்டுவோர் மீது குண்டர் சட்டம் (தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம், 1982) பாயும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING 100 நாட்கள்... ஜூலை 25 முதல் சூறாவளியை சுழன்றடிக்கப்போகும் அன்புமணி... அதிர்ச்சியில் ராமதாஸ்...!