நாயுடன் நிர்வாண கோலம்... பிறப்புறுப்பில் பீர் பாட்டிலை சொருகிய காமுகன் கைது..!
சிதம்பரத்தில் டாபர்மேன் வளர்ப்பு நாயுடன் நிர்வாணமாக படுத்த கூலித் தொழிலாளி. நாய் குறைத்ததால் பீர் பாட்டிலை உடைத்து பிறப்புறுப்பில் குத்திய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நகரில் உள்ள நேரு நகரில் வசித்து வருபவர் விக்கி என்கிற விக்னேஷ்(30). இவர் ஒரு டாபர்மேன் நாய் வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்(49). இவர் கூலித் தொழிலாளி ஆவார்.
இரவு நேரத்தில் அந்த வழியாக சென்ற நாகராஜ் விக்னேஷ் வீட்டின் வாசலில் படுத்திருந்த டாபர்மேன் நாய் அருகில் நைசாக சென்றுள்ளார். பின்னர் நாயுடன் நிர்வாணமாக படுத்து தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தைன்னு கூட பார்க்கலையே.. 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை..!
அப்போது நாய் குரைத்து சத்தம் போட்டுள்ளது. இதனால் கோபமடைந்த காமுகன் நாகராஜ், தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து நாயின் பிறப்புறுப்பில் குத்தியுள்ளார். அதனால் நாய் மேலும் சத்தம் போட்டு கத்தியது.
நாயின் சத்தம் கேட்டு விக்னேஷ் வெளியே வந்து பார்த்தபோது, காமுகன் நாகராஜ் விக்னேஷை குத்தி விடுவதாக மிரட்டி உள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கூலித்தொழிலாளி நாகராஜை கைது செய்து, அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: எந்தெந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கலாம்? முதல்வர் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம்..!