×
 

ஹப்பாடா... ஒரு வழியா வந்தாச்சு... பூந்தமல்லி - வடபழனி மெட்ரோவுக்கு அனுமதி..!!

வடபழனி - பூந்தமல்லி மெட்ரோவிற்கு அனுமதி கிடைத்துள்ளது

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வரும் மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடம் 4கில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.

முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான ஆளில்லா மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பூந்தமல்லி-போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கு முன்பு, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள்  

இந்திய ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டது. அப்போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: "திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்!

பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் பாதுகாப்பு சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மேற்கொண்டார். 4 நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி மேற்கொண்டார்.

பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து முதல் இரண்டு நாளும், அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாள் மெட்ரோ ரயிலை 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கியும் , நாளாவது நாள் மெட்ரோ அலுவலகத்தில் இருந்து ஆய்வு செய்தார்.மேலும் ரயிலில் உள்ள பயணிகள் அவசர காலங்களில் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளும் வசதி, தீ விபத்து ஏற்பட்டால் செயல்படும் புகை கண்டறியும் கருவிகள், ரயிலின் அடியில் உள்ள உபகரணங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் ரயிலின் இழுவை அமைப்பு ஆகியவை சரியாக இயங்குகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அவசர கால பிரேக்குகளைப் பயன்படுத்தியும் சோதனைகள் நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி சோதனை செய்து பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share