×
 

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைகிறதா?... பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட முக்கிய தகவல்...!

காய்ச்சல், தொடர் இருமல், தொண்டை வலி, உடல்வலி, கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும்

2026-ல் இதுவரை 1,558 H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் நேற்று தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,288 பாதிப்புகள் பதிவாகியிருந்தன. இந்த ஆண்டு H1N1 பாதிப்பு மே முதல் ஜூலை வரை அதிகமாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை பாதிப்பு அதிகமாக இருந்தது.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

காய்ச்சல், தொடர் இருமல், தொண்டை வலி, உடல்வலி, கடுமையான சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

இதையும் படிங்க: ரூ.121 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்... காணொளி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் விஜய்..!

இதனிடையே இன்றைய சட்டப்பேரவை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், “தமிழகத்தில் விரைந்து பரவி வரும் எச்1என்1 காய்ச்சலைக் கட்டுப்படுத்த, முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காவது தடுப்பூசி போடும் திட்டம் அரசிடம் உள்ளதா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்?” என கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்ததாவது: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, “எச்1என்1, அந்த பன்றிக் காய்ச்சல் என்று சொல்லப்படுகிற ஃப்ளூ என்று சொல்லப்படுகிற அந்தக் காய்ச்சல் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. பார்த்தீர்களென்றால், சென்ற ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் அதிகமாக இருந்தது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல். இந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் அது கட்டுக்குள்தான் இருக்கிறது. நாம் தொடர்ந்து கண்காணிப்பில்தான் வைத்திருக்கிறோம்.

அதாவது, நீங்கள், மாண்புமிகு உறுப்பினர் சொல்வதுபோல, முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைத்தான் அதிகமாகப் பாதிக்கக்கூடிய நோயாக இது இருக்கிறது. அதை ஆய்வு செய்து, தேவைப்பட்டால் கண்டிப்பாக தடுப்பூசி போடுவதற்கான பணிகளை நாம் மேற்கொள்வோம்” எனக்கூறியுள்ளார். 
 

இதையும் படிங்க: நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share