இது நம்ப லிஸ்டிலையே இல்லையே... முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தவெக செய்யப்போகும் தரமான சம்பவம்... ஷாக்கில் மத்திய அரசு...!
நீட் கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது. கல்வி மற்றும் மருத்துவம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை நிலைப்பாடு.
விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற 11-ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்: மருத்துவமனைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தரும். விரைவில் புதிய கிரிட்டிக்கல் கேர் பிளாக் பணிகள் தொடங்கப்பட உள்ளது. மேலும் மருத்துவமனையின் வளர்ச்சிக்காக நிர்வாகம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது 611 படுக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
புற்றுநோய் சிகிச்சைக்கான கதிர்வீச்சு இயந்திரம் அமைக்க வேண்டிய அவசியம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு. புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தேவையான வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!
மருத்துவமனைகளில் நோயாளி பராமரிப்பு குறைபாடு, சுகாதார வசதிகள் பற்றாக்குறை போன்ற புகார்கள் குறித்து கேள்விக்கு. நல்ல நிர்வாகத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். சுத்தமான காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துவது தொடர்பாக பல்வேறு துறைகளிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளது. அவை அனைத்தையும் அரசு கனிவுடன் பரிசீலித்து உரிய முடிவுகளை எடுக்கும்.
தமிழகத்தில் மருத்துவர், நோயாளி விகிதம் இந்திய அளவில் சிறப்பாக உள்ளது. அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
அரசு மருத்துவமனைகளில் கையூட்டு பெறப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேள்விக்கு. லஞ்சம் மற்றும் ஊழலற்ற நிர்வாகமே அரசின் நோக்கம். தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவ கவுன்சிலிங் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர், மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான அனைத்து கவுன்சிலிங்குகளும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
நீட் தேர்வு குறித்து அரசின் நிலைப்பாட்டை விளக்கிய அமைச்சர், நீட் கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரானது. கல்வி மற்றும் மருத்துவம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை நிலைப்பாடு. நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வரை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக முதுகில் சவாரி செய்ய முடிவெடுத்த காங்கிரஸ்... முதல் சந்திப்பிலேயே விஜயிடம் ராகுல் வைத்த ஷாக்கிங் டீல்...!