×
 

ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை அனுபவிக்கும் ஞானசேகரனிடம் ஒரு முறை கூட பேசியதில்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்று வரும் ஞானசேகரன் என்பவன் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் பேசியதாகவும், அவர் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் பேசி இருப்பதாகவும் செல்போன் அழைப்புகளின் ஆதாரங்களை வைத்து அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா என்று சந்தேகத்தை அண்ணாமலை எழுப்பினார்.

இந்த நிலையில், ஞானசேகரன் விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். கோட்டூர் சண்முகம் வட்டச் செயலாளர் என்ற முறையில் விழாவுக்கு அழைப்பு விடுப்பதற்காக தன்னிடம் பேசியதாகவும் கோட்டூர் சண்முகம் என்ன பேசினார் என்ற ஆடியோவையும் அண்ணாமலை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: உறுதி! அறுதி! தாய் மீது சத்தியம் சொல்லி கமலாலயம் பக்கம் U-TURN அடிச்ச இபிஎஸ்! ரகுபதி விளாசல்

ஞானசேகரனுடன் ஆன புகைப்படம் குறித்து விளக்கிய அமைச்சர், வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யச் சென்ற போது ஞானசேகரன் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான் என்றும் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை அனுபவிக்கும் ஞானசேகரனுடன் தான் ஒரு முறை கூட பேசியது இல்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

இதையும் படிங்க: த.வெ.க.வுக்கு வலை வீசும் TTV... விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு வர அழைப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share