ஒவ்வொரு வீட்டு சட்டி, பானைக்குள்ள போய் பார்க்க முடியுமா? - டென்ஷன் ஆன மா.சுப்பிரமணியன்...!
பிலால் உணவகத்தில் சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்தார்.
திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வரும் பிலால் ஹோட்டலில் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகமாக சீல் வைத்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, திருவல்லிக்கேணியில் எதிரே உள்ள காவல்நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிலால் ஹோட்டலில் உணவு வாங்கி சாப்பிட்ட உணவு வாங்கி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி பேதி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக தண்டையார்பேட்டை மருத்துவ மனையிலும், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் மவுண்ட் ரோட்டில் உள்ள பிலால் ஓட்டலில் சகோதரிகளான கல்லூரி மாணவிகள் குடும்பத்துடன் வந்து மட்டன் குழம்பு சாப்பிட்டுள்ளனர். இவர்களும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ராயப்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்தணும்.. மதசார்பற்ற சக்திகள் வாங்க.. அழைப்பு விடுக்கும் பிரகாஷ் காரத்.!!
இதையடுத்து புகாரியின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சோதனை செய்ய வந்தனர். ஆனால், கடை உரிமையாளர்கள் இல்லாத காரணமாக தற்காலிகமாக கடையை பூட்டு போட்டுச் சென்றனர். பிரபலமான உணவகத்தில் சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து பதிலளித்த அவர், சமையல் செய்தது ஒரு தனியார் ஓட்டல், சாப்பிட்டவர்கள் பொதுமக்கள் இதில் உணவு பாதுகாப்புத்துறை எப்படி பொறுப்பாகும். ஒவ்வொரு வீட்டில் சமைப்பதையுமா உணவு பாதுகாப்புத்துறை சோதனையிட முடியும் என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏதாவது குறை இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். ஒவ்வொரு வீட்லயும் நடக்கற நல்ல விஷயங்கள்ல சமைக்கிறப்ப ஒவ்வொரு சட்டியிலயும் ஒவ்வொரு பானையிலயும் போய் அவங்க என்ன சமைக்கிறாங்கன்னா பாக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. யாருக்கும் பெரிய அளவிலான பிரச்சனைகள் இல்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாணவிகளை சீரழித்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்... அடுக்கடுக்காய் குவியும் புகார்கள்...!