அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை.. அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒரு வார காலத்தில் டாக்டர் பற்றாக்குறை என்பது இருக்காது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.20 கோடி மதிப்பீட்டில் புதிய சிடி ஸ்கேன் கருவியையும், 61.29 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி என மொத்தமாக 2.81 கோடி செலவில் உயர் மருத்துவ உபகரணங்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவர்கள் பணி நிரப்பப்பட உள்ளது ஒரு வார காலத்தில் டாக்டர் பற்றாக்குறை என்பது இருக்காது எனத் தெரிவித்தார்.
திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை இல்லாதது குறித்த கேள்விக்கு, 6 மாவட்டங்களில் தற்போது ஆஞ்சியோ கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் 6 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட தீவிர தலை காயப் பிரிவு தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் செயல்படாதது குறித்த கேள்விக்கு, மதுரையிலிருந்து ஒரு மருத்துவர் தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முடிஞ்சா அதையும் வெளியிடுங்க... அண்ணாமலைக்கு சவால்விட்ட மா.சுப்பிரமணியன்...!
இடையில் பேசிய திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் தற்போது தலை காய பிரிவில் ஆட்கள் யாரும் இல்லை என தெரிவித்தார். புதிதாக பணி அமர்த்தப்படும் மருத்துவர்கள் இருந்து தீவிர தலை காய பிரிவுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் அமைச்சர் மா சுப்பிரமணியன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்...!