“இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!
“குறி வைத்தால் தவற மாட்டேன்; தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்.” அதை ரீட்ரெயின் செய்து, அதைச் சாதித்துக் காட்டியவர் நம்ம தலைவர்தான்.
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் மரியவில்சன் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது: வெள்ளை அறிக்கை வெளியிடும்போது இந்த நிதிநிலை எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படையாகச் சொன்னோம். அதை ஏற்றுக்கொண்டு இப்போதுவரை மக்கள் எங்களைக் கொண்டாடுகிறார்கள். அதுதான் எங்களுடைய நேர்மைக்கான சான்று. அன்றைக்கும் நாங்கள் பொய் சொல்லவில்லை. பொய் சொல்லக்கூடாது என்று சொல்கிறார்கள் அல்லவா? அதனால் சொல்லக்கூடாது. உண்மைக்கு மாறாக எதையும் சொல்லவில்லை. இன்றைக்கும் நாங்கள் அதைச் சொல்லவில்லை. என்றைக்கும் நாங்கள் அதைச் சொல்ல மாட்டோம். எங்கள் தலைவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடம் இது.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி நான் பேசியே ஆக வேண்டும். அதற்குக் காரணம், இந்த சபையில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் எண்ணிக்கைகள் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதையெல்லாம் படித்துப் படித்து சொல்லிக்கொண்டிருந்ததால், இப்போது நான் சொல்லியாக வேண்டும்.
ஏனென்றால், அவருடைய அரவணைப்பில் வாழ்ந்தவர்தான் என்னுடைய காட்ஃபாதர் திரு. ஜே.பி.ஆர். அவர்கள். இது இங்கிருக்கிற வேலு சாருக்கு நன்றாகத் தெரியும். ஒரு கட்டத்தில் அவர் என்னை ஆதரித்திருக்கிறார். நேற்றும் நன்றி தெரிவித்தேன் சார்.
இதையும் படிங்க: சி.எம்.விஜய்க்கு ஆதரவு தெரிவித்த திமுக... சட்டப்பேரவையில் சீனையே மாற்றிய உதயநிதி...!
அதுமட்டுமில்லாமல், இங்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சார் இருக்கிறார். அங்கே ஆப்டை பால்ராஜ் என்று தெரியும். சரி. அந்த வழியில் வந்தவர்கள் நாங்கள். கிட்டத்தட்ட 1987-க்குப் பிறகு நாங்கள் அரசியல் பக்கமே வரவில்லை. ஒதுங்கி இருந்தோம். ஒரு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வாய்ப்பு கிடைத்தது.
தலைவர் மூலமாக, தலைவருக்கு மிகவும் பிடித்த தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். அவர் எப்போதும் ஒரு ரிப்பீட் செய்யக்கூடிய கோட்ஸ் எல்லாம் இருக்கிறது. தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி காஞ்சிபுரத்தில் ஒரு மேடையில், ஸ்ரீபெரும்புதூரில் அவர் சொல்லியிருக்கிறார். அதை இங்கே ஒரு கோட்டாக சொல்ல விரும்புகிறேன். உங்கள் அனுமதியுடன் சார்.
‘மர்மயோகி’ என்ற படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் கரிகாலன். அதை மிகவும் அழகாகப் பிரனவுன்ஸ் செய்திருப்பார்கள். தலைவர் அழகாகச் சொல்லியிருப்பார்:
“குறி வைத்தால் தவற மாட்டேன்; தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்.”
அதை ரீட்ரெயின் செய்து, அதைச் சாதித்துக் காட்டியவர் நம்ம தலைவர்தான்.
ஒரு கதை சொல்லியாச்சு. ஒரு கோட் சொல்லியாச்சு. ஒரே ஒரு பாடல் மட்டும் பாடுகிறேன். புரட்சித் தலைவர் நினைவாக, உங்கள் அனுமதியுடன்:
“கருணை இருந்தால் வள்ளலாகலாம்,
கடமை இருந்தால் வீரனாகலாம்,
பொறுமை இருந்தால் மனிதனாகலாம்,
மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.”
எங்கள் அண்ணன், தமிழ்நாடு முதலமைச்சர் அவரைப் பற்றி புரட்சித் தலைவர் பாடியதற்கு மிகவும் சந்தோஷம். அப்படியே சொல்லிவிட்டு போயிட்டார் என்று நினைக்கிறேன்.
இந்த நிதிநிலை அறிக்கை ஒரு பெரிய சப்ஜெக்ட். அது எனக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். ஆரம்பத்திலேயே நான் வந்து சொல்லியிருந்தேன்.
எங்களுக்கு முதல் நாளிலேயே முதலமைச்சர் அவர்கள் ஒரு டீட்டெய்ல் ரிப்போர்ட் ஒன்றைத் தயார் செய்யச் சொல்லியிருந்தார்கள். மூன்று துறை ரீதியாக ரிப்போர்ட் தயார் செய்திருந்தோம். அது அவருடைய டேபிளில் இருக்கிறது. அவர் எப்போது அனவுன்ஸ் பண்ணுவார் என்று தெரியவில்லை.
ஆனால் அதில் சின்ன விஷயங்கள் இரண்டு, மூன்று மட்டும் நான் சொல்லிவிடுகிறேன். அதில் ஒரு டிஜிட் லாஸ் இருக்கலாம். ஒரு டிஜிட் என்றால் ஒரு கோடி டிஜிட் லாஸ் இருக்கலாம். இரண்டு டிஜிட் கோடி லாஸ் இருக்கலாம். மூன்று டிஜிட் கோடி லாஸ் இருக்கலாம். நான்கு டிஜிட் கோடி லாஸ் இருக்கலாம். ஏன் சொல்லப்போனால், ஐந்து டிஜிட் கோடி லாஸ் கூட இருக்கலாம்.
அது எந்த டிஜிட் கோடி லாஸ் இருக்கிறது என்று தெரியாது. ஆனால் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இங்கே நாங்கள் சொல்லிவிடுவோம். கூடிய சீக்கிரத்தில்.
ஃபார்மர் ஃபைனான்ஸ் மினிஸ்டர் தங்கம் தென்னரசு சார் இல்லையா? அவருக்கு முன்னால் இருந்தவர் பிடிஆர் சார். அவரையும் என்னையும் ஒப்பிட்டு சில கருத்துகளை இங்கே சொன்னார்கள்.
சொல்லு, டிஸ்கஸ் பண்ணும் லாங்குவேஜ் இஸ் பேரியர் தான். எனக்கு அதை மறுக்கவில்லை. அன்று கொஞ்சம் அவசரப்பட்டது உண்மைதான். நானும் தமிழ் மொழி, தாய்மொழி எல்லாம் தமிழ்தான். ஆனால் பூண்டி கலைவாணன் சார் சொன்ன மாதிரி, நான் வளர்ந்தது திருவாரூர்; பிறந்தது பாண்டிச்சேரி; படித்தது சென்னை; இப்போது என்னைத் தத்தெடுத்தது ஆர்.கே. நகர்.
இந்த நான்கு இடத்திலும் நான் சுற்றிச் சுற்றி வந்திருக்கிறேன். ஒரு இடத்தில் இல்லை. எல்லா இடத்திலும் போய் போய் வந்திருக்கிறேன்.
இங்கே லேர்ன்ட் ஸ்காலர்ஸ் எல்லாம் இருப்பீர்கள். நிறைய ஸ்காலர்ஸ் இங்கே இருக்கிறீர்கள். இங்கே 234 ரெப்ரசென்டேட்டிவ்கள் இருக்கிறீர்கள்.
கடந்த ஒரு நான்கு நாட்களாக எனக்கு இவ்வளவு மரியாதையும், வாய்ப்பும் கிடைத்ததற்கு எங்கள் தலைவருக்கு மிகப்பெரிய நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
ஏனென்றால், ஒரே இடத்தில் இவ்வளவு பேர், இவ்வளவு விவாதங்கள். மேடம் அன்புமணி அவர்கள் அழகாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நிறைய பாயிண்ட்ஸ். அதையெல்லாம் நோட் பண்ணிக் கொண்டிருந்தேன்.
தோழர்கள் சொன்னார்கள். என்னுடைய குட் ஃபிரண்ட் வன்னியரசர் சொல்லிக் கொண்டிருந்தார். காங்கிரஸ் சார், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சீனியர் மோஸ்ட் கவுன்சில் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.
எல்லாம் எங்களுக்கு இன்ஃபர்மேஷன்தான், நாலெட்ஜ்தான். நான் மறுக்கவில்லை.
ஜஸ்ட், இது எங்களுக்கு ஃபர்ஸ்ட் டைம். வெரி ஃபர்ஸ்ட் டைம். இந்த ஃபர்ஸ்ட் டைமில் நாங்கள் திருத்திக் கொள்வோம். சில விஷயங்களை உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொள்வோம். We will come back strong. வரப்போகும் நாட்களில் வெரி ஸ்ட்ராங்காக நாங்கள் கம்பேக் பண்ணுவோம் என வழக்கமான தனது பாணியான பேச்சு வழக்கு மற்றும் ஆங்கிலம் கலந்து உரையாற்றினார்.
இதையும் படிங்க: தென் மாநிலங்களுக்கு ஆபத்து... சட்டப்பேரவையில் கர்ஜித்த சி.எம்.விஜய்... தொகுதி மறுவரையறைக்கு கடும் எதிர்ப்பு...!