×
 

"லஞ்சம் கொடுத்தேன்"..!அமைச்சர் மரிய வில்சனுக்கு செக்..! லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு..!!

மஞ்சள் விவகாரம் குறித்து பேசி அமைக்கும் மரிய ரீசன் இத நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் ஆற்றிய பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். தனது சொந்த பள்ளிக்கே லஞ்சம் வாங்கப்பட்டதாகவும், அதற்குத் தானே நேரடி சாட்சி என்றும் தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் யார் மூலமாக எவ்வளவு தொகை பெறப்பட்டது என்பதைத் தான் விரிவாகச் சொல்ல முடியும் என்றும், எந்த விசாரணைக்கும் அல்லது அவதூறு வழக்குக்கும் தயார் என்றும் அவர் சவால் விடுத்தார்.

முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் இல்லாததால் இந்த விஷயத்தைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.இந்தப் பேச்சைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ஒரு அமைச்சராக இருந்துகொண்டு லஞ்சம் கொடுத்தேன் அல்லது சாட்சி என்று பேரவையில் பகிரங்கமாகக் கூறுவது மிகப்பெரிய தவறு என்றும், அதற்கான விசாரணை உடனடியாக நடைபெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அமைச்சர் தானே சாட்சி என்று கூறியுள்ளதால் லஞ்ச ஒழிப்புத் துறை அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் முறைப்படி புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். இது தனிப்பட்ட பழிவாங்கல் என்றும், தனது கல்வி நிறுவனங்கள் மீது முன்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான பதிலடி என்றும் அவர் குற்றம்சாட்டினார்.அமைச்சரின் இந்த அறிக்கை பேரவையில் கடும் விவாதத்திற்கு வழிவகுத்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களைக் கோரினர்.

இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்.. அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டம்.!

அமைச்சர் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி, எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார் என்று கூறினார். பின்னர் சில தெளிவுபடுத்தல்களில் தான் நேரடியாகக் கொடுக்கவில்லை, சாட்சியாக இருந்தேன் என்றும் விளக்கமளித்ததாகத் தகவல்கள் வெளியாயின. எனினும், இந்த விவகாரம் அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. திமுக தரப்பு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் ஆளும் தரப்பு முந்தைய ஆட்சியின் ஊழல்களை அம்பலப்படுத்தும் நடவடிக்கையாக இதைப் பார்க்கிறது.இந்தப் பேச்சு தமிழக அரசியலில் மீண்டும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னணிக்குக் கொண்டுவந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருப்பது அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: இந்தியா கூட்டணியில் தவெக..! வெயிட் பண்ணுங்க... அமைச்சர் ஷாஜகான் திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share