தேவையில்லாம ஆய்வு செய்ய கூடாது..! CM ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி..!!
தேவையின்றி ஆய்வு மேற்கொள்ள கூடாது என முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்
தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் பெரும் முறைகேடு மற்றும் லஞ்சம் புகார்கள் எழுந்துள்ளன. இந்தச் சம்பவம், ஊழல் ஒழிப்பை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த தவெக அரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்திற்காக லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். நேற்று மாலை முதல் தான் அரசு வழக்கறிஞர் நியமனம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். வழக்கறிஞர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்று தெரிவித்தார்.
அரசு வழக்கறிஞர்கள் நியாயமான முறையில் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார். யாராவது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு பணம் பெற்று இருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். உன்னுடைய பெயரை யாவது தவறாக பயன்படுத்தினாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார் இதுவரை மூன்று மாவட்டங்களுக்கு மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "செந்தில் பாலாஜி ஒன்னுமே செய்யல"..! வெறும் அறிவிப்புதான்... அமைச்சர் நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு..!!
தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தற்போது நடைபெறும் நியமனம் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமானது என்று கூறியிருந்தார். யாராவது பணம் வாங்கி இருந்தால் பணம் அளித்தவர்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இடையூறாக ஆய்வு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். தேவையின்றி ஆய்வு நடத்தக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிவித்தார். ஆளுநர் ஆய்வு எந்த பிரயோஜனமும் கிடையாது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சோலார் மின் உற்பத்தி..! சிலர் தூண்டுவதால் மக்கள் போராடுறாங்க..! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!