×
 

தவறு நிரூபித்தால் கடும் ஆக்ஷன்..! அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை..! போராட்டத்தை கைவிட்ட மாணவிகள்..!!

திருச்சியில் செவிலியர் மாணவி உயிரிழந்த சம்பவத்தால் போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவிகளிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து அதிகம் கொடுத்ததால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாக  சக மாணவிகள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வந்தனர். மூக்கடைப்பு காரணமாக சிகிச்சைக்கு சென்ற செவிலிய மாணவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக சக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் மரணத்திற்கு உரிய நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டத்தை கைவிடமாட்டோம் எனக்கூறி போராடி வந்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலிய மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அளித்த வாக்குறுதியை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலிய மாணவி உயிரிழந்திருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மாணவிக்கு அளித்த சிகிச்சையில் தவறு நடந்து இருந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மாணவிகளின் புகார்களை எழுதி வாங்கி இருப்பதாகவும் தற்காலிக நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

இதற்கிடையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. செவிலியர் மாணவி உயிரிழந்ததாக புகார் எழுந்திருக்கும் நிலையில் அது குறித்து விசாரிக்க மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சுகாதாரத்துறை விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டிருப்பது சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. 

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share