×
 

பழனி கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் ரமேஷ்... பக்தர்களுக்கு பகிர்ந்த முக்கிய தகவல்...!

பழனி முருகன் கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ஆய்வு- பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் பகுதிகளில் நாய்கள் உலா வருவதாக புகார் தெரிவித்ததையடுத்து நாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார் . மலையடி ஓரத்தில் ரோப் கார் மற்றும் வின்ச் நிலையங்களில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் , அன்னதான கூடம் மற்றும் பஞ்சாமிர்தம் தயாரிப்பில்லையங்களில் ஆய்வு செய்தார். வின்ச் நிலையத்தில் ஆய்வு செய்தபோது பக்தர்கள் காத்திருக்கும் அறையில் நாய்கள் உலா வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர். உடனடியாக நகராட்சி அதிகாரிகளை அழைத்து நாய்களை அப்புறப்படுத்தி கொடுக்கும்படி உத்தரவிட்டார்.  

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பழனி முருகன் கோவிலில் கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டுத் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிப்பதற்காகவே தாமும், துறைச் செயலாளர் குமரகுருபரன் மற்றும் ஆணையர் வினய் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினரும் இன்று நேரில் வந்து மேற்பார்வையிட்டதாகக் குறிப்பிட்டார். 

தொடர்ந்து, பக்தர்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்ற சில பெருந்திட்டப் பணிகளைத் திறந்து வைத்துள்ளதாகவும், மலைக்கோவிலில் பக்தர்கள் செல்லக்கூடிய தரிசன வரிசைகள், அன்னதானக் கூடங்களில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் உலகப் புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படும் விதம் ஆகிய அனைத்தையும் ஆய்வு செய்துள்ளதாகக் கூறினார்.

இதையும் படிங்க: கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா?... பழனி கோயில் படிக்கட்டில் இளம் ஜோடி செய்த காரியம்... பக்தர்கள் ஆவேசம்...!

​ திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அவர், அறநிலையத்துறையின் நிர்வாகத்தை முறையாகக் கையாள்வதே தனது பணி என்றும், கொள்கை ரீதியான முடிவுகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் கழகமும் மட்டுமே முடிவு செய்யும் என்றும், சட்டம்-நிர்வாகம் சார்ந்த கேள்விகளுக்குத் தாம் எப்போதும் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். 

மேலும், பழனி மலைக்கோவிலுக்குப் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரண்டாவது ரோப் கார் (Rope Car) திட்டம் மற்றும் நவீனப் பக்தர்கள் காத்திருப்பு கூடங்கள் (Waiting Halls) அமைப்பதற்கான மாஸ்டர் பிளான்கள் (Master Plans) குறித்து இன்று விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதில் செய்யப்பட வேண்டிய தேவையான மாற்றங்கள் குறித்து ஆலோசித்து விரைவில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்றார்.

இதையும் படிங்க: "ரமேஷ் ஐயங்கார்"... அனிதா ராதா கிருஷ்ணனுக்கு அறநிலையத் துறை அமைச்சர் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share