×
 

சொன்னா புரிஞ்சுக்கோங்க! கிளாம்பாக்கம் சென்னைக்கு பொக்கிஷம்.. தெளிவாக விளக்கிய சேகர்பாபு..!

எந்த ஒரு கட்டமைப்பாக இருந்தாலும் முதலில் ஆரம்பிக்கும் போது சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் சென்னை, வண்டலூர் அருகே ஜி.எஸ்.டி சாலையில் 88.52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய புறநகர் பேருந்து நிலையம். கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் 2019 இல் முன்மொழியப்பட்டு, ரூ.393.74 கோடி செலவில் 2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து கிளாம்பாக்கத்தை அடைவதற்கு மெட்ரோ அல்லது புறநகர் ரயில் இணைப்பு இல்லாதது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், பண்டிகை காலங்களில் பேருந்துகள் பற்றாக்குறையால் பயணிகள் சாலை மறியல் செய்யும் நிலை உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்குவதால் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாது, தனியார் வாகனங்களில் வருவோருக்கு மதுரவாயல் பைபாஸ் அல்லது வெளிவட்ட சாலையில் சுங்கக் கட்டணம் மற்றும் எரிபொருள் செலவு அதிகரிக்கிறது எனவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதையும் படிங்க: வேல் எடுத்து சுற்றி வந்தும் வெல்ல முடியவில்லை... பாஜகவை விளாசிய அமைச்சர் சேகர்பாபு!!

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சனைகள் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, எந்த ஒரு கட்டமைப்பாக இருந்தாலும் முதலில் ஆரம்பிக்கும் போது சிறு சிறு பிரச்சனைகள், சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும் என கூறினார். கிளாம்பாக்கத்தில் திட்டமிடாமல் தொடங்கப்பட்ட திட்டத்தை, முறையாக செயல்படுத்தி மக்களுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோம் என்றும் பேருந்து வசதிகள் தொடர்பாக முறையாக தகவல் தெரிவித்தால் அவர்களுக்கு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார். இரவு நேரங்களில் தான் சில பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் பகலில் இது போல எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படுவதில்லை., அதற்கான தீர்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பேசினார்.

திருச்சி விமான நிலையம் தொடங்கி பல நாட்கள் ஆகியும் இதுவரை உங்க விமான போக்குவரத்து நடைபெறவில்லை என தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, ஆனால் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கியதில் இருந்து பேருந்து போக்குவரத்து நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பூங்காக்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அமைத்துள்ளதாகவும், ரயில் நிலையம் காவல் நிலையம் அமைக்கும் பணிகள் முழு வீட்டில் நடைபெற்ற வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், கிளாம்பாக்கம் ஒரு வரப்பிரசாதம் என்றும் சென்னைக்கு பொக்கிஷம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக அமைச்சர்களுக்கு இறுமாப்பு ஜாஸ்தி! இவங்களா தமிழை காப்பாத்துறாங்க? தமிழிசை சாடல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share