கனிமவளத்துறை அடுத்த அதிரடி... மேலும் 88 குவாரிகளுக்கு காத்திருக்கும் ஆப்பு...!
தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் மூலம் செயல்படும் குவாரிகள் மீதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு மாத காலத்தில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 76 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக கனிமங்களை ஏற்றிச் சென்ற 480 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத கனிம வெட்டுதல் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமவளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் மூலம் செயல்படும் குவாரிகள் மீதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்குகளில் சிக்கிய காரணத்தால் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வந்த சில குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கனிமவளத் துறை தெரிவித்துள்ளது. மேலும், மீதமுள்ள 80 குவாரிகளின் செயல்பாடுகளையும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில், கனிமவளத்துறை வாயிலாக, 2,000 இடங்களில் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு இடங்களில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக கருங்கல் வெட்டி எடுக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் உள்ள குவாரிகளில், அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்..! தவெக எம்எல்ஏக்களுக்கு தலைமை அதிரடி உத்தரவு..!
மொத்தம், 431 குவாரிகள் ஆய்வு செய்யப்பட்டதில், 155 குவாரிகளில், விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அவற்றில், 67 குவாரிகள் செயல்பாடுகளை, தற்காலிகமாக நிறு த்த உத்தரவிடப்பட்டது. அடுத்து, 88 குவாரிகளில், கருங்கல் வெட்டி எடுக்கும் பணிகளை நிறுத்த, மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தவிர, கடந்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், 78 குவாரிகளில் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்படுவது தெரியவந்தது. அவற்றுக்கு 'சீல்' வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் சுண்ணாம்புக்கல், திருச்சியில் குவார்ட்ஸ் கனிமங்கள் அனுமதியின்றி எடுக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்..!! மயங்கிய பக்தர்கள்... பதற்றம்..!!