×
 

ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

ஆணவ படுகொலை விவகாரத்தில் தயவு தாட்சண்யம் என்று நடவடிக்கை எடுக்க அமைச்சர் வன்னியரசு உத்தரவிட்டுள்ளார்

தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து சமூகத்தை உலுக்கி வரும் நிலையில், இத்தகைய கொடூரமான செயல்களை முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்ற உறுதியான நிலைப்பாட்டை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறையின் பொறுப்பில் இருக்கும் அவர், ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான தனிச் சட்டம் இயற்றுவது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருவதால், தற்போதைய தவெக அரசிலும் இதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆணவப் படுகொலைகள் என்பது வெறும் குடும்ப மரியாதை காக்கும் செயல் அல்ல என்றும், அது சாதி அமைப்பின் ஆழமான வேர்களைப் பிரதிபலிக்கும் வன்முறை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இடைசாதி அல்லது இடைமதத் திருமணங்களை ஏற்க முடியாத குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் இளைஞர்களை கொலை செய்வது அல்லது தற்கொலைக்குத் தூண்டுவது போன்ற சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களை தடுக்க ஏற்கனவே உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை என்பதால், தனிச் சட்டம் அவசியம் என்று அவர் கருதுகிறார்.

இதையும் படிங்க: "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

முந்தைய அரசின் காலத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் கே.என். பாட்ஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தி வருகிறார். அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார். முதலமைச்சரும் இதற்கு உறுதியளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆணவ படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டால் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்க அமைச்சர் வன்னியரசு உத்தரவு பிறப்பித்தார். 

இதையும் படிங்க: தாகத்தில் தவிக்கும் தமிழக மக்கள்..! சிறு தடுப்பணைகள் கட்ட நயினார் அறிவுரை.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share