×
 

10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு... மாலை சந்திப்போம்..! முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

திருச்சி மாநாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியலில் மாபெரும் நிகழ்வு நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தின் சிறுகனூர் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் 12-வது மாநில மாநாடு இது. "ஸ்டாலின் தொடரட்டும்... தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாடு, சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வெறும் கட்சி மாநாடு மட்டுமல்ல. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் வலிமையையும், ஒற்றுமையையும் உலகிற்கு காட்டும் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மிக விரிவாகவும் திட்டமிட்டும் நடைபெற்றுள்ளன. மாநாட்டு திடல் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 200 ஏக்கர் பகுதியில் பிரதான அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 3.60 லட்சத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு, 66 பாக்ஸ்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாக்ஸிலும் 5,000 பேர் அமரும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏழு லட்சம் பேர் நின்று பார்க்கும் அளவுக்கு இடவசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

240 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட மேடை, அதன் பின்னணியில் 100 அடி நீளம் 40 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட எல்இடி திரை, 1,000 அடி நீள கொட்டை வடிவ முகப்பு ஆகியவை இந்த நிகழ்வின் பிரம்மாண்டத்தை உணர்த்துகின்றன. மேலும் 35,000 வாகனங்கள் வரை வரும் என எதிர்பார்க்கப்படுவதால் போக்குவரத்து மாற்றங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தும் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளன.மாநாட்டின் மிக முக்கியமான பகுதி மாலை நிகழ்ச்சி. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மாலை 5.30 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வருகை தருகிறார். 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து, பிரம்மாண்ட ராம்ப் வழியாக 500 மீட்டர் தொலைவு நடந்து சென்று தொண்டர்களை சந்தித்து வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் மேடை ஏறி உரையாற்றுகிறார்.

இதையும் படிங்க: எங்கும் கொலை... எப்போதும் கொலை.. ஒரு நாளாச்சு வாய தொறந்தாரா ஸ்டாலின்? இபிஎஸ் கண்டனம்..!!

இந்த சந்திப்பு மற்றும் உரைதான் "மாலை சந்திப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் தனது கட்சி உடன்பிறப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் . இந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2021-ல் இதே திருச்சியில் நடந்த மாநாட்டில் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட ஏழு வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவித்து வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது. இம்முறையும் புதிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட மாநாடு திமுகவின் அசுர பலத்தை, தொண்டர்களின் ஒற்றுமையை, முதல்வர் ஸ்டாலினின் தலைமைத்துவத்தை தமிழகமே பார்க்கும் ஒரு மாபெரும் காட்சியாக அமையவுள்ளது. மாலை நிகழும் இந்த சந்திப்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

இதையும் படிங்க: விஜயை பின் தொடர்ந்ததால் விபத்தில் சிக்கிய இளைஞர்.. நேரில் சென்று நலம் விசாரித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share