அதிகாரிகள் அதட்டலா இருக்க கூடாது... யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை..!!
அதிகாரிகள் அதட்டலாக இருக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இந்திய குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை விக்டோரியா அரங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழ்நாடு அரசின் நான் முதல்வர் திட்டத்தில் பயின்ற மதுரை சேர்ந்த ராஜேஸ்வரி தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்த சாதனை படைத்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தில் படித்த 60 பேரில் 56 பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கான குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாட்டில் யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததாக தெரிவித்தார். யுபிஎஸ்சி தேர்வுகளை வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்டார். நாம் எடுத்த முயற்சிகளுக்கு தற்போது பலன் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தூதர்களாகவும் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நினைச்சாலே நெஞ்சம் பதறுதே... விடிந்ததுமே புயலைக் கிளப்பிய எடப்பாடி பழனிசாமி... கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்...!
அதிகாரிகள் என்றாலே அதட்டலுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று கூறினார். சாதாரண மக்களுடன் அன்பாகவும் பண்பாகவும் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். எவ்வளவு பிசியாக இருந்தாலும் பெற்றோருடன் ஐந்து நிமிடம் ஆவது பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஹாப்பி நியூஸ்... MBBS படிப்பில் விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீடு உயர்வு..!! முக்கிய அறிவிப்பு..!!