×
 

கொளுத்தும் கோடை வெயில்... முதல்வர் ஸ்டாலினின் பிரச்சார நிகழ்வில் மாற்றம்..!!

கோடை வெயில் கொளுத்தி வருவதால் முதலமைச்சர் ஸ்டாலினின் பிரச்சார நிகழ்ச்சியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. மார்ச் 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் அன்றைய தினமே மனுவை தாக்கல் செய்திருந்தார். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பரப்புரை மேற்கொண்டு உள்ளார். திமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னம் மற்றும் கூட்டணி கட்சிகளின் சொந்தங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டு வருகிறார். 

இந்த நிலையில், கோடை வெயில் அதிகரித்து வருவதால் முதலமைச்சர் ஸ்டாலினின் பிரச்சார நிகழ்ச்சிகள் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று மாலை 5 மணி- புதுச்சேரி, நாளை மாலை 4 மணி- சீர்காழி, இரவு 7 மணி கடலூர், 8 ஆம் தேதி மாலை 4 மணி- திருவண்ணாமலை, இரவு 7 மணி-விழுப்புரம், 9-ந்தேதி மாலை 5 மணி-கரிசங்கால்-படப்பை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் வாயிலாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சென்னையின் 22 தொகுதிகளிலும் திமுக தான்... அமைச்சர் மா. சு. உறுதி..!!

இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை மற்றும் மாலை என பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அவருடைய பிரசார பயண திட்டம் மாலை, இரவு என்று மாற்றப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: திமுக பொறுப்பாளர் மனைவிகளுக்கு மட்டுமே அதை செஞ்சியிருக்காங்க...ஸ்டாலினை வெளுத்து வாங்கிய காளியம்மாள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share