எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! மத்திய அரசுக்கு அவ்வளவு பயமா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று பெரும் அமளி ஏற்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ராணுவ தலைவர் ஜெனரல் எம்.எம். நரவனேயின் நினைவுக்குறிப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட 2020 இந்தியா-சீனா எல்லை மோதல் விவரங்களை ராகுல் காந்தி அவையில் எழுப்ப முயன்றபோது, அது தடை செய்யப்பட்டது.
இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு, காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அமளியால் அவை பலமுறை இடைநிறுத்தப்பட்டது. பின்னர், மதிய அமர்வில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் "ஒழுங்கற்ற நடத்தை" காரணமாக 9 எம்பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
காகிதங்களை கிழித்து சபாநாயகரை நோக்கி எம்பிக்கள் வீசியதால் ஒழுங்கு நடவடிக்கையாக சஸ்பெண்ட் தீர்மானம் முன்மொழிபட்டு நிறைவேற்றப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பாஜக அரசு ஏன் பயப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை... ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய அதிமுக..!
சபை உறுப்பினர்களுக்கு பதிலளிக்கவும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தொடர்பான விஷயங்களில் தெளிவுபடுத்தவும் அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை பேசுவதற்கான ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க உடனடியாக சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓம் பிர்லாவுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: எங்கப்பா அந்த தடையற்ற மின்சாரம்? சொன்னீங்களே... செஞ்சீங்களா? நயினார் விளாசல்..!