என் வாக்குச்சாவடி... வெற்றி வாக்குச்சாவடி...! பரப்புரையை தொடங்கி வைத்த முதல்வர்...!
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பரப்புரையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், 2025-ஆம் ஆண்டில் கட்சியின் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைகள், 2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவதற்கும், கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களிடையே திமுகவின் செல்வாக்கை மேலும் விரிவாக்குவதற்கும் முக்கியமானவையாக அமைந்துள்ளன.
கட்சியின் அடிமட்ட அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களின் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கும், கட்சி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளின் முக்கிய பகுதியாக, அவர் திமுக நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
இதனிடையே, தமிழ்நாட்டு மக்களை ஒரு பொது இலக்கை நோக்கி ஒன்றிணைத்து, மாநிலத்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவதற்கு உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாக உத்தியைக் குறிக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை திமுக இன்று தொடங்கி உள்ளது. மயிலாப்பூர் தொகுதியில் உள்ள தனது வாக்குச்சாவடியில் பரப்புரையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கினார்.
இதையும் படிங்க: மக்களே தயாரா?... ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3000... பொங்கல் பரிசை அள்ளித் தர காத்திருக்கும் தமிழக அரசு...!
சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். வீடு வீடாக செல்லும் திமுக பூத் கமிட்டி குழுவினர், விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்ப்பதுடன், அரசின் சாதனைகள் குறித்த துண்டுபிரசுரங்களை விநியோகிக்கின்றனர்.
இதையும் படிங்க: 2026 தான் TARGET... என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச் சாவடி பரப்புரையை தொடங்கும் திமுக...!