×
 

நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி.. தொடர்ந்து போராடுவோம்.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை!!

உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்த முதலமைச்சர், மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். மணமக்கள் 16 செல்வங்கள் பெற்று வாழ வேண்டும் என்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழில் பெயர் சூட்டுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருவதாகவும், சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று தந்தவர் பேரறிஞர் அண்ணா எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

 உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர்., நாட்டிலேயே சீர்திருத்தத் திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக தொடர்ந்து வலியுறுத்துகிறது எனவும் கூறினார்.

இதையும் படிங்க: எவ்ளோ ஆணவம் இருக்கும்? உங்க கட்சி நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேவையா... திமுகவை பந்தாடிய அண்ணாமலை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share