அடடே..! ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... அகவிலைப்படி உயர்வு...! முதல்வர் ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்...!
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜூலை 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிடபட்டுள்ளது. இது தொடர்பான அரசின் செய்தி குறிப்பில், தமிழக மக்கள் நலனில் அன்பும் அக்கறையும் கொண்டு பல சீரிய முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்காக வகுக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டுவதிலும் அதை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்ப்பதிலும், களப்பணி ஆற்றுவதிலும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படிக்கு இணையாக உயர்த்தி வழங்க முதலமைச்சர ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 01.07.2025 முதல் 58 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை... இத செஞ்சே ஆகணும்! திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்...!
இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 1829 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "இந்த பொழப்புக்கு ஸ்டாலின் வெட்கி தலைகுனியனும்..." - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்...!