×
 

முடிவு தலைகீழாகுமா.? கொளத்தூர் தொகுதியில் முறைகேடு.? நீதிமன்றத்தை நாடிய ஸ்டாலின்..!!

கொளத்தூர் தொகுதியில் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதி பரபரப்பான அரசியல் களமாக மாறியது. இங்கு மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வி.எஸ். பாபுவிடம் சுமார் எட்டாயிரத்து எழுநூற்று தொண்ணூற்றைந்து வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முடிவு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டுகள் கட்சியினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஸ்டாலின் தரப்பில் சில வாக்குச்சாவடிகளில் தனக்கு ஆதரவாக வந்திருக்க வேண்டிய வாக்குகள் சரியாக பதிவாகவில்லை என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. இதையடுத்து பதினான்கு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் விவிபேட் கருவிகளையும் சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி ஜூலை மாத இறுதியில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வலுவான அறையில் ஆய்வுப்பணி தொடங்கியது. திமுகவின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ உள்ளிட்டோர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.

ஆய்வு நடைபெற்றபோது திமுக தரப்பில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன. சில இயந்திரங்களின் முகவரி அட்டைகள் புதிதாக இருப்பதாகவும், அவற்றில் தேவையான விவரங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதாகவும் கூறப்பட்டது. அரக்கு சீல்கள் முறையாக ஒட்டப்படாமல் இருப்பதும், சில விவிபேட் கருவிகள் சரியாக இயங்காததும் குறிப்பிடப்பட்டது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட சில இயந்திரங்களில் சுமார் முப்பது சதவீத அளவுக்குப் பிரச்சினைகள் இருப்பதாக திமுக தரப்பு வலியுறுத்தியது. இதனால் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும், இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பல கேள்விகள் தேர்தல் அதிகாரிகளிடம் எழுப்பப்பட்டு, ஆய்வில் தொடர்ந்து பங்கேற்பதை நிறுத்திவிட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என அறிவிக்கப்பட்டது.மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாநகர ஆணையர் சமீரன் இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரித்தார். ஆய்வில் எந்தவித முறைகேடும் கண்டறியப்படவில்லை என்றும், சில தொழில்நுட்பக் குறைபாடுகள் மட்டும் இருந்தன என்றும் அவர் தெரிவித்தார். 

இதையும் படிங்க: பெயர் மாற்றுவதில் முதல்வர் பிசி.! சட்டப்பேரவையை சினிமா செட்-னு நெனச்சுட்டாரு..! ஸ்டாலின் விமர்சனம்.!!

இந்த நிலையில் கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். கொளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி வி பேடுகளை சரி பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தேர்தல் இயந்திரம் தொடர்பான புகாரியில் வெளிப்படையான ஒரு நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தலைமையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்ததில் குறைகள் தெரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொளத்தூரில் வி எஸ் பாபு வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: திமுகவில் அதிரடி..! 13 மாவட்டச் செயலாளர்களுக்கு ‘குட்பை’..!! ஸ்டாலின் போட்ட புதிய ரூல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share