×
 

ஆண்டவன் மீது ஆணையாக..! விஜயை பார்த்து உறுதிமொழி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்..!

ஆண்டவன் மீது ஆணையாக எனக்கூறி உறுதிமொழி இருக்கும் போது அமைச்சர் ராஜ்மோகன் விஜயை பார்த்த சம்பவம் நெகிழ வைக்கிறது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். முதல்வராகப் பதவியேற்ற நிலையில், தொடர்ந்து செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

முதல்வராக பொறுப்பேற்றதுமே மக்கள் முன்பு 3 திட்டங்களில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். தொடர்ந்து சட்டப்பேரவைக்குச் சென்று அலுவல் பணிகளையும் மேற்கொண்டார். சட்டப்பேரவை அதிகாரிகள், துறை செயலாளர்களை சந்தித்தார். அதனையடுத்து பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இதனிடையே, 2026-ம் ஆண்டு தமிழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் அமைச்சர் ராஜ்மோகன் என்று எம்எல்ஏவாக பதவியேற்றார்.

இதையும் படிங்க: #BREAKING: பெரம்பூர் தொகுதியின் MLA- வாக முதல்வர் விஜய் பதவியேற்பு..! சட்டப்பேரவையில் உறுதிமொழி..!

அப்போது ஆண்டவன் மீது ஆணையாக எனக் கூறிவிட்டு விஜய் யை பார்த்த செயல் நெகிழ வைக்கும் நிகழ்வாக அமைந்தது. நேற்று முதல்வர் விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்கும் போதும் ராஜ்மோகன் ஆண்டவர் மீது ஆணையாக எனக்கூறி விஜயை பார்த்திருந்தார். இன்றும் தனது உறுதியை மொழி ஏற்பு நடக்கும் பொழுது விஜயை பார்த்து உள்ளார். விஜய் மீது அவருக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: தவெக தலைமையிலான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..! பரபரப்பான களம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share