எங்க சின்னையா மாதிரி ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது... எம்எல்ஏ அருள் பரபரப்பு பிரஸ்மீட்!
அன்புமணி ராமதாசை போல ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது என பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
பாமகவில் தந்தை மகன் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. மகன் ஆதரவாளர்களை தந்தையும், தந்தை ஆதர்வாளர்களை மகனும் மாறி மாறி நீக்கி வருகின்றனர். ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டங்களை இருவரும் தனித்தனியாக நடத்தி வருகின்றனர். குறிப்பாக தருமபுரி, சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் பாமக எம்எல்ஏ அருள் மற்றும் கௌரவ தலைவர் ஜிகே மணி ஆகியோர் உடல்நல குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும்.,உடல் ரீதியாக, மன ரீதியாக குணமடைய நாம் எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என அன்புமணி தெரிவித்தார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து, பாமக எம்எல்ஏ அருள் மீதும், ஜிகே மணி மீதும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ராமதாஸ் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை அன்புமணி முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அத்துமீறும் சிங்கள அரசு! LETTER எழுதுனா போதுமா? மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அன்புமணி கண்டனம்..!
இந்த நிலையில், பாமக எம்எல்ஏ அருள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எங்களுக்கு கூட்டு பிராத்தனை செய்வதாக கூறிய மிகப்பெரிய தலைவர், ராமதாசை அவமானப்படுத்துவதாக கூறி பாட்டாளி வர்க்கத்தையே அவமானப்படுத்துவதாக கூறினார். வன்னியர் சங்கம் துவங்கும்போது அன்புமணிக்கு 12 வயது., இந்த கட்சி துவங்குவதற்கு முழு காரணம் ராமதாஸ் தான்., மற்ற கட்சிகளை பார்த்தோமானால் தாய் இயக்கம் இருக்கும்.,ஆனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தாய் இயக்கம் அல்ல., ஒரு தாய் தான் அது ராமதாஸ் தான் என்று உருக்க மாக பேசினார்.
ராமதாஸ் சுயம்புவாக பெற்றெடுத்த குழந்தை தான் பாட்டாளி மக்கள் கட்சி என்றும் ராமதாசை விமர்சிப்பது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக ஜி.கே மணி இருந்தபோது, தலைவராக அன்புமணியை போடுவதாக ராமதாஸ் சொன்னார் உடனே ஜி.கே மணி புன்னகைத்த முகத்தோடு அவரை முன்மொழிந்து கொண்டு வந்தார். அவரை அன்புமணி படுத்துகிற அவமானம் சொல்லி மாள முடியாது என கூறினார். அன்புமணி ராமதாசை போல ஒரு நல்ல தலைவரை பார்க்க முடியாது எனவும் பாமக எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமதாஸ் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார்... அன்புமணி பரபரப்பு தகவல்!!