சர்ச்சை கீழடி... திமுக மேல எந்த தப்பும் இல்ல! அதிமுக, பாஜகவை சாடிய எம்எல்ஏ எழிலன்!
பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சிப்பதாக திமுக எம்எல்ஏ எழிலன் குற்றம் சாட்டியுள்ளார்.
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசு போதுமான தரவுகள் இல்லை எனக் கூறி மறுத்துள்ளது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இது பற்றிய அதிமுக மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதற்கு எதிர் தரப்பில் அதிமுகவும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.
கீழடி விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வரும் நிலையில், கீழடி அகழாய்வு தொடர்பாக திமுக எம்எல்ஏ எழிலன் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்திய துணை கண்டத்தின் தொடக்கம் தமிழ்நாடு தான் என 2016ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதாகவும், திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தந்த உத்தரவின்படி கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளைஞர் தற்கொலையில் பெரும் சந்தேகம்! திமுக அடக்குமுறைக்கு போலீஸ் பணிய கூடாது - நயினார்
2016 - 2021 வரை கீழடி அகழாய்வுக்கு அதிமுக அரசு 55 லட்சம் தான் செலவு செய்தது என்றும் அதிமுக ஆட்சியில் மொத்தமாக இரண்டு அகழாய்வுகளுக்கு 1.10 கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது எனவும் கூறினார். திமுக ஆட்சியில் 38 இடங்களில் 27 கோடி ரூபாய் திமுக செலவு செய்ததாகவும் கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது தொடர்பாக திமுக அரசை அதிமுக தவறாக குற்றம் சாட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
2024 மக்களவை தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சி 1,494 கோடி செலவிட்டுள்ளது எனவும் இது மொத்த தேர்தல் செலவில் 44.56 சதவீதம் என்றும் விளக்கம் அளித்தார். பாஜகவுக்கு அடுத்தபடியாக மக்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் 620 கோடி செலவிட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் எம்எல்ஏ எழிலன் கூறினார்.
இதையும் படிங்க: முருகன் மாநாட்டில் அரசியல் கூடாது.. அடிக்கடி அமித்ஷா வருவார்.. நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?