×
 

MLA பழனியாண்டியை அரெஸ்ட் பண்ணனும்... கொலைவெறி தாக்குதல்..! வாயை திறக்காத ஸ்டாலின்... தமிழிசை கண்டனம்..!

செய்தியாளரை தாக்கிய விவகாரத்தில் எம்எல்ஏ பழனி ஆண்டியை கைது செய்ய வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில், சிவாயம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல் குவாரி தொடர்பான முறைகேடுகளை விசாரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவராக ஸ்ரீரங்கம் தொகுதி திமுக எம்எல்ஏ எம். பழனியாண்டி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி சேனலின் நிருபர் ஈ. கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் எஸ். செபாஸ்டின் ஆகியோர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்தில் இயங்கும் கல் குவாரியில் சட்டவிரோதமாகக் கல் வெட்டுதல், சுற்றுச்சூழல் விதிகள் மீறல் போன்றவை குறித்து செய்தி சேகரிக்கச் சென்றனர். அவர்களுடன் சில சமூக ஆர்வலர்களும் இணைந்திருந்தனர்.

குளித்தலை-மணப்பாறை சாலையில் சுமார் 25 முதல் 50 பேர் கொண்ட கும்பல் செய்தியாளர் குழுவை சுற்றி வளைத்ததாக கூறப்பட்டு உள்ளது. அவர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி இருந்ததாகவும் வீடியோ கேமரா, லைவ் டிரான்ஸ்மிட்டிங் உபகரணம், டிரோன், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்து உடைத்து விட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான ஆதாரங்கள் அவ்வப்போது வெளிவந்து வருகின்றன.

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கும், ட்ரம்புக்கும் பயப்படாத மோடி ராகுலுக்கு பயப்படுவாரா? முதல்வருக்கு தமிழிசை பதிலடி..!

இதில் எம்எல்ஏ பழனியாண்டி கேமராவை பிடுங்கி செய்தியாளரை தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகின. இந்த சமூகத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஜனநாயகத்தின் நான்காவது கண் என்று குறிப்பிட்டார். செய்தியாளரை தாக்கிய விவகாரத்தில் எம்எல்ஏ பழனி ஆண்டியை கைது செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை என்றும் இதுவே உத்தரபிரதேசத்திலோ அல்லது மணிப்பூரிலோ நடந்திருந்தால் என்னென்ன பேசுவார்கள் என்ற கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: போதைப்பிடியில் தத்தளிக்கும் தமிழகம்... வெட்கக்கேடு..! வறுத்தெடுத்த வானதி MLA..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share