×
 

MP அமரகீர்த்தி கொலை வழக்கு.. 12 பேருக்கு தூக்கு தண்டனை..! இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!

நாடாளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி கொலை வழக்கில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் போராட்ட காலகட்டத்தில் நடந்த ஒரு மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், கம்பஹா உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு சமீபத்தில் ஒரு கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அதுகோரளவும் அவரது மெய்ப்பாதுகாவலரான போலிஸ் சார்ஜென்ட் ஜயந்த குணவர்தனவும் கொல்லப்பட்ட வழக்கில், 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2022 மே 9ஆம் தேதி நிட்டம்புவ நகரில் நடந்தது. அப்போது நாடு முழுவதும் அரசுக்கு எதிரான 'அரகலய' போராட்டங்கள் உச்சத்தில் இருந்தன. ராஜபக்சே அரசாங்கத்துக்கு எதிரான கோபம் எங்கும் பரவியிருந்த நிலையில், பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த SLPP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகோரள தம்புள்ளை செல்லும் வழியில் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது போராட்டக்காரர்கள் கூட்டம் அவரது வாகனத்தை மடக்கிப் பிடித்தது. அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் கோபமடைந்த கூட்டம் அவரையும் அவரது பாதுகாவலரையும் கம்பு, தடிகள் கொண்டு தாக்கி கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.இந்த இரட்டைக் கொலை தொடர்பாக மொத்தம் 41 அல்லது 42 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! பொன்னை பாலுவுக்கு இடைக்கால ஜாமீன்..! கோர்ட் உத்தரவு..!

நீண்ட விசாரணைக்குப் பிறகு, 16 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு பேருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும், அது ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், 23 பேர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: கவின் கொலை வழக்கில் பிடிவாரண்ட்..! SI கிருஷ்ணகுமாரியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share