×
 

புதிய சட்டமன்றத்திற்கு எதிர்ப்பு..! இருப்பதை வைத்து நல்ல ஆட்சி தாங்க..! கனிமொழி எம்பி காட்டம்..!!

புதிய சட்டமன்றம் அமைப்பதற்கு கனிமொழி எம்பி எதிர்ப்பு தெரிவித்தார்.

தமிழக அரசு சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இது தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள இடநெருக்கடியை சமாளிக்கவும், நவீன வசதிகளுடன் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கவும் எடுக்கப்பட்ட முடிவாகும்.

முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த இந்த திட்டம் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 முதல் 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலம் பெரும்பாலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மாடிகள் கொண்ட முதன்மை கட்டிடத்துடன் இந்த வளாகம் வடிவமைக்கப்படும் என்றும், இதற்காக கட்டிடக்கலை ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்யும் குழுக்கள் உள்ளிட்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த அறிவிப்பு வெளியான உடனேயே எதிர்க்கட்சிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

இதையும் படிங்க: உசிலம்பட்டி சிறுமி தற்கொலை: குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும்! எம்பி கனிமொழி வலியுறுத்தல்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி. ராஜாவை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, புதிய சட்டமன்றம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இருக்கிற சட்டப்பேரவையை வைத்து முதலில் நல்ல ஆட்சியை தாருங்கள் என்று விமர்சித்தார். அதை விட்டுவிட்டு மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டினார். நல்ல ஆட்சியை தந்து விட்டு பிறகு புதிய தலைமைச் செயலகம் கட்டலாம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "CHENNAI DAY"..! கோடிக்கணக்கான கனவுகளை தாங்கும் தாய்... கனிமொழி MP பெருமிதம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share