×
 

Twist இருக்கு போலயே..! தலைமை முடிவு பண்ணா ஏத்துப்போம்..!! பொடி வைத்த MP மாணிக்கம் தாகூர்..!

தலைமை முடிவு செய்தால் ஒற்றுமையுடன் ஏற்றுக் கொள்வோம் என மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.

திமுகவும் காங்கிரஸும் இடையேயான கூட்டணி உறவு தமிழக அரசியலில் நீண்டகாலமாக மிக முக்கியமானதாகவும், சில சமயங்களில் சிக்கலானதாகவும் இருந்து வருகிறது. இந்த உறவு வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்லாமல், திராவிட இயக்கத்தின் வரலாறு, தேசிய அரசியல் சூழல், பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளும் தேவை ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த உறவில் சில பதற்றங்கள் தெரியத் தொடங்கியுள்ளன. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கூடுதல் தொகுதி ஒதுக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேற ராகுல் காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது 

இதற்கிடையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சமீப நாட்களாக கூறிவரும் கருத்துக்கள் சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றன. ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தி தொடர்ந்து மாணிக்கம் தாகூர் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறித்தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: தோளோடு தோள் நின்ற மகத்தான போராளி... நல்லக்கண்ணு மறைவுக்கு MP கனிமொழி இரங்கல்..!!

தற்போது கூட்டணி உடையுமா அல்லது நீடிக்குமா என்ற நிலையில் இருக்கும் சூழலில் சூசகமாக பதிவு ஒன்றைக் கொடுத்துள்ளார். "தனிநபர்களிடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என்பது நம்மில் எவரையும் விட பெரியது என்று தெரிவித்துள்ளார் தலைமை முடிவு செய்யும்போது, அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறோம் என்றும் ஏனென்றால் ஒற்றுமை நமது மிகப்பெரிய பலம் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? முதல்ல உங்க கூட்டணிய பாருங்க... அதிமுகவுக்கு கனிமொழி பதிலடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share