×
 

TNPSC குளறுபடிகள்... TRANSFER போதுமா? நீதி விசாரணை நடத்த MP சு. வெங்கடேசன் வலியுறுத்தல்..!

டிஎன்பிஎஸ்சி குளறுபடிகள் விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தினார்.

நேற்று நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள் இரவு முழுவதும் படித்து, தயாராகி, தேர்வு மையங்களுக்கு சென்று காத்திருந்த நிலையில், இந்த குளறுபடி அவர்களை மிகவும் வருத்தமடையச் செய்தது. எல்லாம் தொடங்கியது சென்னையில் உள்ள சில தேர்வு மையங்களில் இருந்து குறிப்பாக அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி உள்ளிட்ட இடங்களில், ஹால் டிக்கெட் இருந்தும் பெயர்கள் அட்டெண்டன்ஸ் லிஸ்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சிலருக்கு தவறான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு மையத்தில் 300 பேருக்கான ஏற்பாடு செய்திருந்த நிலையில், 1000-க்கும் மேற்பட்டோர் வந்து நின்றனர். இதனால் குழப்பம் ஏற்பட்டு, தேர்வர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை சென்னையில் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பரவியது. ஏராளமான தேர்வர்களின் ரெஜிஸ்ட்ரேஷன் எண்கள் தவறாக ஒதுக்கப்பட்டிருந்தன. சிலர் தேர்வு எழுதத் தொடங்கிய பிறகே ரத்து என்று அறிவிக்கப்பட்டது. இதனால் TNPSC அதிகாரிகள் முதலில் சென்னைக்கு மட்டும் ஒத்திவைப்பு என்று சொன்னாலும், பின்னர் முழு தமிழகத்துக்கும் ரத்து செய்தனர்.

TNPSC குரூப் 2 , 2A முதன்மைத் தேர்வுகள் குளறுபடிகளால் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து TNPSC கட்டுப்பாட்டு அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறிப்பிட்டார். ஆனால், இது போதுமான நடவடிக்கை அல்ல என்றும் ஏற்கெனவே குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10,000 குரூப் 4 பணியிடங்கள், முழுமையான காலிப்பணியிடங்கள் நிரப்புதல் என போட்டித் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக அதிகாரத்துக்கு எங்கள் குரல் அடிபணியாது..! சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி சு. வெங்கடேசன் திட்டவட்டம்..!

இந்நிலையில் இப்படியான TNPSC தேர்வு குளறுபடிகள் என்பது தொடர்ந்து வருகிறது என்றும் இது எந்த விதமான வெளிப்படைத்தன்மையையோ , நம்பிக்கையையோ இளைஞர்கள் மத்தியில் உருவாக்காது என்றும் TNPSC குளறுபடிகள் குறித்து நீதி விசாரணை நடத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். தேர்வர்களுக்கு தேவையான கால இடைவெளியோடு உடனடியான நிவாரணங்களை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எழுத்தையும், கலையையும் மண்டியிட வைக்க முயற்சி.. சு. வெங்கடேசன் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share