×
 

மொதல்ல மத்திய அரசின் ஊழலை பேசுங்க அண்ணாமலை..! முத்தரசன் விளாசல்..!

மத்திய அரசின் ஊழல் பற்றி அண்ணாமலை முதலில் பேச வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தினார்.

தேர்தல் ஆணையம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும்,புறம்பாக செயல்படுவதாகவும் அண்ணாமலை மத்திய அரசின் ஊழலை பற்றி முதலில் பேசட்டும் அவர் பாஜக புறக்கணித்த தலைவர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் வளவனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். அப்போது, தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கு இடையே நடைபெறுகிற தேர்தல் அல்ல என்றும் தமிழகத்தில், தலைமை செயலாளர் காவல் துறை அதிகாரிகள் திடீரென மாற்றபடுகிறார்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் புறம்பாகவும் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் கூறினார்.

பாஜகவினர் புகார் கொடுத்தால் உடனடியாக மாற்றபடுகிறார்கள், தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஒரு தலைபட்டசமாக செயல்படுவதாக தெரிவித்தார். ஐந்து மாநில தேர்தல் நடைபெறுகிற நிலையில் நாடாளுமன்றத்தை நடத்துகிறார்கள் தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக நாடாளுமன்ற உறுப்பினர் புகார் அளித்தால் நிராகரிப்பதாகவும், மத்திய அரசாங்கம் ஜனநாயகம் தன்மையற்ற அரசாக செயல்படுவதாகவும், நாட்டிலையே அதிக வரி செலுத்துகிற மாநிலமாக தமிழகம் உள்ளது.

இதையும் படிங்க: “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

ஆனால் குறைந்த நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்படுகிறது பாஜக ஆளும் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். மத்திய அரசாங்கம் தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருகின்றனர். அதனை தமிழகம் ஏற்காமல் உள்ளது ஏனென்றால் பள்ளி படிப்பு பாதியிலையே நிற்க கூடாதென என்பதால் தான் என்றும் மூன்றாவதாக மொழி ஏற்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல, மத்திய அரசு தமிழகத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி துணை போவதாக குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: மகளிருக்கு ரூ.3000..! மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை வாக்குறுதிகளை அறிவித்த அமித்ஷா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share